Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) மகளிர் மன்றத்தின் சார்பாக ‘சர்வதேச சுய பராமரிப்பு தின கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவ உளவியலாளரும், லிப்கோலிஸியஸின் நிறுவனருமான மருத்துவர் என். மஞ்சுஸ்ரீ மாணவிகளிடையே உரையாடினார்.
அவர் தமது உரையில் பெண்களுக்கான குறிக்கோள், விருப்பம் மற்றும் ஆசைகள் ஆகியவற்றை நிறைவேற்ற எண்ணங்களை தைரியமாக வைத்துக்கொள்வதும்ரூபவ் குறிக்கோளை அடையும் வகையில் விடாப்பிடியாக இருக்கும் மனவோட்டமும் அவசியம் என்றார்.
மேலும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவிகள் சிறப்பு விருந்தினரிடம் பல்வேறு வினாக்களை எழுப்பி தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். இக்கருத்தரங்கை கல்லூரி மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் த.மதுமதி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இக்கருத்தரங்கில் சுமார் 350 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.